Sunday, August 31, 2014

யானைடாக்டரும் கோட்டியும் கேசவமணி

ஜெயமோகனின் அறம் தொகுப்பிலுள்ள யானை டாக்டர் மற்றும் கோட்டி கதைகளை மீண்டும் வாசித்தேன். இரண்டு கதைகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவே, அதைக் குறித்து எழுதலாம் எனத் தோன்றியது. இந்தக் கதைகளில் வரும் யானை டாக்டரும் பூமேடையும் ஒரே குணாம்சத்தைக் கொண்ட கதாபாத்திரங்கள். என்ன வித்தியாசம் எனில், ஒருவர் விலங்குகளிடையே தன் பணியைச் செய்கிறார் மற்றவர் மனிதர்களிடையே செய்கிறார். அவ்வளவுதான். ஆனால் இருவரும் மனிதர்களுக்கு, சமூகத்திற்கு நன்மை என்று நினைப்பதை விடாப்பிடியாகச் செய்கிறார்கள். ஒருவர் மனிதர்களிடமிருந்து விலங்குகளை காக்க முயற்சிக்க, மற்றவர் மனிதர்களிடமிருந்தே மனிதனைக் காப்பாற்றப் போராடுகிறார். ஒருவர் விலங்குகளிடம் மனிதர்கள் கொள்ளும் இணக்கம், நேசம் ஆகியவற்றை வலியுறுத்த, மற்றவர் மனிதர்கள் சக மனிதர்களிடம் அன்பும் பாசமும் கொள்வதை அறிவுத்துகிறார். ஆனால் இருவருமே சமூகத்தால் பைத்தியக்காரர்கள் என்று பரிகசிக்கக் கூடியவர்களாக, அங்கீகரிக்கப் படாதவர்களாக இருப்பது நம் சமூக அமைப்பின் சாபக் கேடுகளில் ஒன்று.

யானை டாக்டரில் வரும் காட்டைப் பற்றிய சித்தரிப்புகள் நம்மை ஜெயமோகனின் காடு நாவலுக்குள் தன்னிச்சையாக இழுத்துச் சென்றுவிடுகிறது. எனவே காட்டுடனும், யானைகளுடனும் நாம் மிகவும் நெருக்கம் கொண்டுவிட்டது போல் உணர்கிறோம். விலங்குகளைப் பற்றிய டாக்டரின் பார்வை நம் மனதைச் சம்மட்டியால் அடித்து விழிக்கச் செய்கிறது. புழு என்ற உயிர் கைக்குழந்தை என்பதாக அவர் சொல்வது, நம் மனம் கொள்ளும் அருவருப்பை முற்றிலுமாக துடைத்து எறிந்துவிடுகிறது. இந்த பூமியில் ஜீவித்திருக்கும் அனைத்து உயிர்களோடும் நாம் இந்த வினாடியிலிருந்து நேசம் கொள்ளவேண்டும் என்று மனம் துடிக்கிறது. கதையின் உச்சகட்டமாக யானைகள் டாக்டரைத் தேடி வந்து வைத்தியம் பார்க்கும் காட்சி நம்மை சுக்கு நூறாக உடைத்து இந்தப் பிரபஞ்சத்தின் காற்றோடு காற்றாய் கரைய வைக்கிறது.

மனிதர்களில் பலர் நாட்டில் மட்டுமல்ல, காட்டிற்கும் சென்று அதன் அமைதியைச் சீரழிக்கும் குணம் படைத்தவர்கள். இயற்கை என்பதன் அர்த்தத்தை முற்றாக இழந்துவிட்ட நாகரீக மனிதர்கள்! எல்லாவற்றையும் வெகுசுலபமாக கழிப்பறையாக மாற்றிவிடுவதில் வல்லவர்கள்! தமது இன்பத்தை அல்லாமல் பிறர் துன்பத்தை லவேசமும் பொருட்படுத்தாத மனிதர்கள். மனிதப் பிறவியிலேயே பேதம் கற்பிக்கும் இவர்களின் மனோபாவமே, விலங்குகளை ஐந்தறிவுடையவையாகச் சித்தரிக்க வைத்திருக்கிறது. யானை டாக்டர் இத்தகைய மனிதர்களை அடையாளம் காட்டுவதோடு, அவர்களை வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறது. மேலும் யானைகளைப் பற்றியும் விலங்குகள் பற்றியும் மிக நெருக்கமாக அறியச்செய்து, அதன் மூலம் விலங்குகள் மீதான நம் பார்வையை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது.

கோட்டியில் வர்ணனைகள் இல்லையென்றாலும் அது நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் சற்றும் குறைந்ததல்ல. இந்தக் கதையில் உரையாடல்கள் மூலமாகவே நம் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறார் ஜெயமோகன். மனிதர்கள் நிலை கண்டு நாமே வெட்கப்படுகிறோம். நாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி நமக்கு லவேசமும் இல்லை என்பதை நம்மை மிகத் தீவிரமாக உணரச் செய்யும் கதை இது. கதையின் இறுதியில் பூமேடை என்ற பாத்திரத்தின் முன் நாம் கூனிக் குறுகி சிறுத்துவிடுகிறோம். நாம் செய்த இந்தப் பாவத்திற்கு நமக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் மோட்சமில்லை என்றே படுகிறது. உண்மையில் யார் கோட்டி? பூமேடையா? இல்லை அவரைப் புரிந்துகொள்ளாத மனிதர்களா? மனிதர்களை நெருங்கி அவர்களை அறிந்துகொள்ள வழிசெய்யும் கோட்டி, மனிதன் பார்வையில் இருக்கும் கோளாறை சரிசெய்ய முயற்சிக்கிறது.

யானை டாக்டரின் இறுதியில் நம் மனம் கொள்ளும் பரவசம் நெகிழ்ச்சியினால், அன்பினால் விளைவது. ஆனால் கோட்டியின் இறுதியில் நம் மனம் அடையும் பச்சாதாமும் பரிதாபமும் நம் மனம் கொள்ளும் ஆவேசத்தினால் ஏற்படுவது. ஒரு கதை நீராய் நம் மனதைக் குளிர்விக்கிறது. மற்றொரு கதையோ நம் மனத்தை நெருப்பாய் தகிக்க வைக்கிறது. ஒன்றில் உள்ளம் நிரம்பிய உணர்வு மற்றொன்றிலோ உள்ளம் வெறுமையானதாய் உணர்வு. யானை டாக்டர் அங்கீகரிக்கப் படாமல் போவதைவிட, பூமேடை புறக்கணிக்கப்படுவது நம் மனதை அதிகமும் வருத்துகிறது. ஆனால் இருவருமே மற்றவர்களின் அங்கீகாரத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதும், தாங்கள் ஆற்றும் பணியே முக்கியம் எனக் கருதுவதும் நம்மைப் பெரிதும் நிலை குலையச் செய்கிறது. காரணம் நாம் அவ்வாறு இல்லையே என்ற நம் ஏக்கமும் இயலாமையும்தான். ஆக, அதன் பாதிப்பிலிருந்து நம் மனத்தில் கிளர்ந்தெழும் மாற்றம் எனும் வித்தை விதைக்கும் வித்தையை இக்கதைகளில் மிகத் திறம்படச் செய்திருக்கிறார் ஜெயமோகன்.

இவ்விரண்டு கதைகளையும் படித்து முடித்ததும் நம் மனம்கொள்ளும் பாய்ச்சலும் வெறுமையும் சொல்லும் தரமன்று. ஏன்? ஏன்? என நூற்றுக் கணக்கான கேள்விகள் மனதில் எழுந்து நுரைக்க, அவற்றுக்கு விடைகாண முடியாமல் நாம் தவிக்கிறோம். நாம் மனிதன் என்பதற்கு அவசியமும் அத்தாட்சியும் என்ன என்ற வினாவை இரண்டு கதைகளும் நம் மனதின் அடியாழம் வரை எடுத்துச் சென்று நம்மை உலுக்குகிறது. நாம் எங்கே இருக்கிறோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு விடையாகவே இந்தக் கதைகள் நம்முன் பேருருவம் காட்டி நின்று நம்மை அச்சுறுத்துகிறது. அந்த அச்சம் நம்மை விழிக்கச் செய்யாத பட்சத்தில் இந்த பூமி மீதான நம் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

அறியாமை, இயலாமை, முயலாமை, சுயநலம் மற்றும் அலட்சியம் ஆகியவையே மனிதர்களின் இத்தகைய நடத்தைக்கான காரணமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டியும் அவ்வப்போது நல்லவை நடப்பது யானைடாக்டர், பூமேடை போன்ற நல்ல மனிதர்கள் காலந்தோறும் தோன்றியபடி இருப்பதால்தான். அவர்களை நாம் அடையாளம் காணாவிடினும், அங்கீகரிக்காவிடினும் முடிந்தவரை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே இக்கதைகள் நம்மை சிரம் தாழ்த்தி வேண்டிக் கொள்கின்றன.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_16.html#sthash.eBfvJ72W.dpuf

ஜெயமோகனின் அறம் தொகுப்பிலுள்ள யானை டாக்டர் மற்றும் கோட்டி கதைகளை மீண்டும் வாசித்தேன். இரண்டு கதைகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவே, அதைக் குறித்து எழுதலாம் எனத் தோன்றியது. இந்தக் கதைகளில் வரும் யானை டாக்டரும் பூமேடையும் ஒரே குணாம்சத்தைக் கொண்ட கதாபாத்திரங்கள். என்ன வித்தியாசம் எனில், ஒருவர் விலங்குகளிடையே தன் பணியைச் செய்கிறார் மற்றவர் மனிதர்களிடையே செய்கிறார். அவ்வளவுதான். ஆனால் இருவரும் மனிதர்களுக்கு, சமூகத்திற்கு நன்மை என்று நினைப்பதை விடாப்பிடியாகச் செய்கிறார்கள். ஒருவர் மனிதர்களிடமிருந்து விலங்குகளை காக்க முயற்சிக்க, மற்றவர் மனிதர்களிடமிருந்தே மனிதனைக் காப்பாற்றப் போராடுகிறார். ஒருவர் விலங்குகளிடம் மனிதர்கள் கொள்ளும் இணக்கம், நேசம் ஆகியவற்றை வலியுறுத்த, மற்றவர் மனிதர்கள் சக மனிதர்களிடம் அன்பும் பாசமும் கொள்வதை அறிவுத்துகிறார். ஆனால் இருவருமே சமூகத்தால் பைத்தியக்காரர்கள் என்று பரிகசிக்கக் கூடியவர்களாக, அங்கீகரிக்கப் படாதவர்களாக இருப்பது நம் சமூக அமைப்பின் சாபக் கேடுகளில் ஒன்று.
யானை டாக்டரில் வரும் காட்டைப் பற்றிய சித்தரிப்புகள் நம்மை ஜெயமோகனின் காடு நாவலுக்குள் தன்னிச்சையாக இழுத்துச் சென்றுவிடுகிறது. எனவே காட்டுடனும், யானைகளுடனும் நாம் மிகவும் நெருக்கம் கொண்டுவிட்டது போல் உணர்கிறோம். விலங்குகளைப் பற்றிய டாக்டரின் பார்வை நம் மனதைச் சம்மட்டியால் அடித்து விழிக்கச் செய்கிறது. புழு என்ற உயிர் கைக்குழந்தை என்பதாக அவர் சொல்வது, நம் மனம் கொள்ளும் அருவருப்பை முற்றிலுமாக துடைத்து எறிந்துவிடுகிறது. இந்த பூமியில் ஜீவித்திருக்கும் அனைத்து உயிர்களோடும் நாம் இந்த வினாடியிலிருந்து நேசம் கொள்ளவேண்டும் என்று மனம் துடிக்கிறது. கதையின் உச்சகட்டமாக யானைகள் டாக்டரைத் தேடி வந்து வைத்தியம் பார்க்கும் காட்சி நம்மை சுக்கு நூறாக உடைத்து இந்தப் பிரபஞ்சத்தின் காற்றோடு காற்றாய் கரைய வைக்கிறது.
மனிதர்களில் பலர் நாட்டில் மட்டுமல்ல, காட்டிற்கும் சென்று அதன் அமைதியைச் சீரழிக்கும் குணம் படைத்தவர்கள். இயற்கை என்பதன் அர்த்தத்தை முற்றாக இழந்துவிட்ட நாகரீக மனிதர்கள்! எல்லாவற்றையும் வெகுசுலபமாக கழிப்பறையாக மாற்றிவிடுவதில் வல்லவர்கள்! தமது இன்பத்தை அல்லாமல் பிறர் துன்பத்தை லவேசமும் பொருட்படுத்தாத மனிதர்கள். மனிதப் பிறவியிலேயே பேதம் கற்பிக்கும் இவர்களின் மனோபாவமே, விலங்குகளை ஐந்தறிவுடையவையாகச் சித்தரிக்க வைத்திருக்கிறது. யானை டாக்டர் இத்தகைய மனிதர்களை அடையாளம் காட்டுவதோடு, அவர்களை வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறது. மேலும் யானைகளைப் பற்றியும் விலங்குகள் பற்றியும் மிக நெருக்கமாக அறியச்செய்து, அதன் மூலம் விலங்குகள் மீதான நம் பார்வையை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது.
கோட்டியில் வர்ணனைகள் இல்லையென்றாலும் அது நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் சற்றும் குறைந்ததல்ல. இந்தக் கதையில் உரையாடல்கள் மூலமாகவே நம் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறார் ஜெயமோகன். மனிதர்கள் நிலை கண்டு நாமே வெட்கப்படுகிறோம். நாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி நமக்கு லவேசமும் இல்லை என்பதை நம்மை மிகத் தீவிரமாக உணரச் செய்யும் கதை இது. கதையின் இறுதியில் பூமேடை என்ற பாத்திரத்தின் முன் நாம் கூனிக் குறுகி சிறுத்துவிடுகிறோம். நாம் செய்த இந்தப் பாவத்திற்கு நமக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் மோட்சமில்லை என்றே படுகிறது. உண்மையில் யார் கோட்டி? பூமேடையா? இல்லை அவரைப் புரிந்துகொள்ளாத மனிதர்களா? மனிதர்களை நெருங்கி அவர்களை அறிந்துகொள்ள வழிசெய்யும் கோட்டி, மனிதன் பார்வையில் இருக்கும் கோளாறை சரிசெய்ய முயற்சிக்கிறது.
யானை டாக்டரின் இறுதியில் நம் மனம் கொள்ளும் பரவசம் நெகிழ்ச்சியினால், அன்பினால் விளைவது. ஆனால் கோட்டியின் இறுதியில் நம் மனம் அடையும் பச்சாதாமும் பரிதாபமும் நம் மனம் கொள்ளும் ஆவேசத்தினால் ஏற்படுவது. ஒரு கதை நீராய் நம் மனதைக் குளிர்விக்கிறது. மற்றொரு கதையோ நம் மனத்தை நெருப்பாய் தகிக்க வைக்கிறது. ஒன்றில் உள்ளம் நிரம்பிய உணர்வு மற்றொன்றிலோ உள்ளம் வெறுமையானதாய் உணர்வு. யானை டாக்டர் அங்கீகரிக்கப் படாமல் போவதைவிட, பூமேடை புறக்கணிக்கப்படுவது நம் மனதை அதிகமும் வருத்துகிறது. ஆனால் இருவருமே மற்றவர்களின் அங்கீகாரத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதும், தாங்கள் ஆற்றும் பணியே முக்கியம் எனக் கருதுவதும் நம்மைப் பெரிதும் நிலை குலையச் செய்கிறது. காரணம் நாம் அவ்வாறு இல்லையே என்ற நம் ஏக்கமும் இயலாமையும்தான். ஆக, அதன் பாதிப்பிலிருந்து நம் மனத்தில் கிளர்ந்தெழும் மாற்றம் எனும் வித்தை விதைக்கும் வித்தையை இக்கதைகளில் மிகத் திறம்படச் செய்திருக்கிறார் ஜெயமோகன்.
இவ்விரண்டு கதைகளையும் படித்து முடித்ததும் நம் மனம்கொள்ளும் பாய்ச்சலும் வெறுமையும் சொல்லும் தரமன்று. ஏன்? ஏன்? என நூற்றுக் கணக்கான கேள்விகள் மனதில் எழுந்து நுரைக்க, அவற்றுக்கு விடைகாண முடியாமல் நாம் தவிக்கிறோம். நாம் மனிதன் என்பதற்கு அவசியமும் அத்தாட்சியும் என்ன என்ற வினாவை இரண்டு கதைகளும் நம் மனதின் அடியாழம் வரை எடுத்துச் சென்று நம்மை உலுக்குகிறது. நாம் எங்கே இருக்கிறோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு விடையாகவே இந்தக் கதைகள் நம்முன் பேருருவம் காட்டி நின்று நம்மை அச்சுறுத்துகிறது. அந்த அச்சம் நம்மை விழிக்கச் செய்யாத பட்சத்தில் இந்த பூமி மீதான நம் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
அறியாமை, இயலாமை, முயலாமை, சுயநலம் மற்றும் அலட்சியம் ஆகியவையே மனிதர்களின் இத்தகைய நடத்தைக்கான காரணமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டியும் அவ்வப்போது நல்லவை நடப்பது யானைடாக்டர், பூமேடை போன்ற நல்ல மனிதர்கள் காலந்தோறும் தோன்றியபடி இருப்பதால்தான். அவர்களை நாம் அடையாளம் காணாவிடினும், அங்கீகரிக்காவிடினும் முடிந்தவரை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே இக்கதைகள் நம்மை சிரம் தாழ்த்தி வேண்டிக் கொள்கின்றன.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_16.html#sthash.eBfvJ72W.dpuf

No comments:

Post a Comment