Monday, December 29, 2014

அறம் வரிசையில்

அன்புள்ள ஜெ.,

நேற்று படித்த இந்த செய்தியில் உங்கள் அறம் வரிசை நாயகர் ஒருவரைக் கண்டேன்.. ஊடகத்திற்கே உரிய மிகைப்படுத்தல் இருக்கலாம்.. இருப்பினும் இதுபோன்ற தருணங்களே நம் அறத்தை ஒருபடி மேலே கொண்டு செல்கிறது போலும்...

<a href="http://timesofindia.indiatimes.com/world/pakistan/For-the-first-time-I-couldnt-control-my-tears-says-gravedigger-in-Peshawar/articleshow/45588243.cms">http://timesofindia.indiatimes.com/world/pakistan/For-the-first-time-I-couldnt-control-my-tears-says-gravedigger-in-Peshawar/articleshow/45588243.cms</a>

நன்றி
ரத்தன்

வணக்கம்,

நான் தாழக்குடி பள்ளத்தெருவில் இருந்து வெங்கடேஷ் எழுதுகிறேன். நான் உங்கள் சோற்று கணக்கு எனும் சிறுகதையை படித்து விட்டு உடனே அக்கணமே இக்கடிதம் எழுதுகிறேன்.

கதை மிகவும் அருமையாகவும் ஆழமாகவும் இருந்தது. கரடி கையையும் தாய் கை ஆகியது அழகு.

இது தான் நன் படிக்கும் உங்களுடைய முதல் கதை.

நம்ம ஊர்க்காரர் என்றதும் எனக்கு பெருமிதம்.சந்தோஷம்.

அறம் புத்தகத்தை கண்டிப்பாக இன்னும் இருநாட்களில் படித்து விடுவேன்.
எல்லா மக்களும் அறம் பெறட்டும்.

வாழ்த்துகள்.
நன்றி.

வெங்கடேஷ்

No comments:

Post a Comment